"இன்னும் சில நாட்களுக்கு திமுகவினர் யாரும் வீதிகளுக்கு வரமுடியாது" – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினர், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடுவதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, டிவிஎஸ் டோல்கேட் அருகே பிரசார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்ற தந்த ஒரே இயக்கம் அதிமுக என்றும், திமுக ஆட்சியில் உருப்படியான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்திலேயே, இன்னும் சில நாட்களுக்கு திமுகவினர் யாரும் வீதிகளுக்கு வரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version