“திமுக கூட்டணியில் இவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் தெரியுமா?”

திமுக கூட்டணியில் பணம் படைத்தவர்கள் பதவி சுகம் அனுபவிப்பதற்காக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளரான சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தட்டார்மடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் வாழ்வா சாவா என்ற நிலையில் ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார்.

Exit mobile version