உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிபெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும்

எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், எம்.பி., எல்.எல்.ஏக்கள் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எதிர்வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Exit mobile version