விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்யும் அதிமுக நிர்வாகிகள் – அமைச்சர் தங்கமணி பெருமிதம்

அதிமுக நிர்வாகிகள், எந்தவொரு விளம்பரமும் தேடாமல் மக்கள் பணி செய்து வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புயல் நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் முழுமூச்சோடு ஈடுபட வேண்டும் என்ற அதிமுகவின் வேண்டுகோளுக்கிணங்க பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில், மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக நிர்வாகிகள், எந்தவொரு விளம்பரமும் தேடாமல், மக்கள் பணி செய்து வருவதாக தொரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு அதிமுகவினர் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அதிமுகவினர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

 

Exit mobile version