நாகைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அனுப்பிவைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அனுப்பப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதங்கள் குறைந்துள்ளதாக கூறினார்.

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கடல் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அரசின் நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளதாக தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்த பிறகே அங்கு பிரச்சனை எழுந்துள்ளதாகவும், இதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

 

Exit mobile version