ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி சென்னையில், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ் விருந்து, ஜி.டி.நாயுடுவின் வரலாறு உள்ளிட்ட 72 அரிய நூல்களும், 138 ஆராய்ச்சி நூல்களும் வெளியிடப்பட்டன.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டார். பின்னர் நூலாசிரியர்களுக்கு பரிசுகளை வழங்க பாராட்டினார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு 37 அருங்காட்சியகங்களை உருவாக்கியுள்ளது எனவும், அனைத்து மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version