சென்னையில் கூடுதல் புறநகர் மின்சார ரயில்கள்!

சென்னையில் வார நாட்களில் கூடுதலாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் 500 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தளர்வுகளால் ரயில் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 160 புறநகர் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

Exit mobile version