தீக்காய சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவுகள் கூடுதல் படுக்கை வசதிகளோடு இயங்கும் என்றும், 24 மணிநேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பார்கள் எனவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தீபாவளிக்கு, சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழும் போது, மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Exit mobile version