சுகாதாரத்துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலன் கருதி புதிய அரசுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க தயாராக இருப்பதாக கூறினார். கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட உடன் பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version