ஆந்திர காவல்துறையினரின் செயல்பாடு பற்றி நடிகை ரோஜா விளக்கம்!

கொரோனா வைரசிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவே ஆந்திர காவல்துறையினர் சற்று கடுமையாக நடந்து கொள்வதாக திரைப்பட நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பணியிலிருக்கும் காவல்துறையினருக்கு நடிகை ரோஜா, உணவு வழங்கினார். காவல்துறையினரிடம் பேசிய அவர், வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்களிடம் ஏன் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார். அதற்கு காவல்துறை தரப்பில், 3 முறை எச்சரித்தும், மீண்டும் மீண்டும் தேவையின்றி சாலையில் திரிவதால் கொரோனோ வைரசிடம் இருந்து மக்களை காப்பாற்றவே சற்று கடுமையாக நடந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறினார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே போனால் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படுமென்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென நடிகை ரோஜா கேட்டுக்கொண்டார்.

Exit mobile version