இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்துகிறார் – நடிகை ராதா புகார்!

இரண்டாவது கணவரான காவல் உதவி ஆய்வாளர் அடித்து துன்புறுத்துவதாக நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராதாவுக்கு, திரைப்பட தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், எண்ணுர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் நடிகை ராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. வசந்தராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகை ராதாவை இரண்டாவது திருமணம் செய்து, சென்னை சாலிகிராமத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, கணவர் வசந்தராஜா நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ராதா தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்ததாகவும் காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version