நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்துறையினர் இரு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு சட்ட பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளதாக தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், தற்போது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version