நடிகை மீது நடிகையே மீ டூ புகார்

நடிகை மீது நடிகையே மீ டூ புகார் கூறியிருப்பது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் மீது மட்டுமே கூறி வந்த மீ டூ புகாரனது தற்போது பெண் மீதே ஒரு பெண் பாலியல் புகார் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அனன்யா ராம்பிரசாத் என்பவர் தன்னுடன் நடித்த சக நடிகையான மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அனன்யா ராம்பிரசாத், தனியாக வசித்த மாயா, தன்னையும் சேர்ந்து தங்க வைத்தார் என்றும், பின்னர் தன்னை பாலியல் ரீதியாக கையாள துவங்கினார் என்றும் குறிப்பிட்டார். மேலும் தன்னை நண்பர்களிடம் இருந்தும் குடும்பத்தினரிடம் இருந்தும் பிரித்து வைத்தார் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மாயா கிருஷ்ணன், அனன்யாவுக்கு உதவி மட்டுமே செய்ததாகவும், ஆனால் அவர் தன்னை தவறாக புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றசாட்டை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் மாயா கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version