எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய மாநில அரசுகளுக்கு எங்களது நன்றி – அருள் செல்வி

நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லத்தில் அவரது மனைவி அருள் செல்வி மற்றும் இளையமகள் தேஜஸ்வினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்…

எனது கணவர் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மறைந்துவிட்டார்.

எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய மாநில அரசுகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனது கணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

காவல்துறை மற்றும் ஊடத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதிவரை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

காவல்துறை மரியாதை தனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறியுள்ளார்.

 

 

 

 

 

Exit mobile version