இரண்டு வங்க புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வங்க புலிகளை பிரபல திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தத்தெடுத்துள்ளார்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன் விலங்குகளை மக்கள் தத்தெடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் வன உயிரின தினத்தையொட்டி இந்த பூங்காவில் உள்ள வங்க புலிகளான ஆதித்யா, ஆர்த்தி ஆகிய 2 புலிகளை 6 மாதத்திற்கு 5 லட்ச ரூபாய் வழங்கி நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்தார். இதற்கான காசோலையை பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங்கிடம் அவர் வழங்கினார்.

Exit mobile version