நடிகர் விஜய் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்

நடிகர் விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் 4ம் தேதி காலை முதல் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிகில் படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக அவரிடம் 24 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  விஜயின் வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் விஜயின் வீட்டிலிருந்து 150 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அன்புச்செழியன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version