செல்போனை தட்டிவிட்ட செயலுக்கு நடிகர் சிவக்குமார் வருத்தம்

செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை தட்டிவிட்ட செயலுக்கு நடிகர் சிவக்குமார் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நேற்று நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டார். அவரது, இந்த செயலுக்கு கண்டனம் வலுத்த நிலையில் சிவக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக நடிகர் சிவக்குமார் கூறியிருப்பதாவது. ரசிகர்கள் ஆர்வத்தில் அப்படிதான் செய்வார்கள். பிரபல கலைஞன் அதனை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் என்னை மனதார மன்னிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version