அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு நடிகர் சித்தார்த் பாராட்டு!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் சித்தார்த் பாராட்டு  தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அரசின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version