நடிகர் ரஜினிகாந்த், எந்த அளவுக்கோலின் அடிப்படையில் வெற்றிடம் பற்றி பேசுகிறார்?: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழும் நிலையில், எந்த அளவு கோலை வைத்து வெற்றிடம் என ரஜினிகாந்த் கூறுகிறார் எனத் தெரியவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வைப்பது தொடர்பாக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் நிலையில், எந்த அடிப்படையில் ரஜினிகாந்த் பேசி வருகிறார் எனத் தெரியவில்லையென கூறினார்.

Exit mobile version