மக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ வெளியீடு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பாதிப்பின் 3ம் கட்ட நிலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது, இத்தாலியில் இது போன்ற 3ம் கட்ட நிலைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கு மக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் அங்கு பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும், ஆனால் நாம் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்கும் விதமாக, வீட்டிலேயே இருப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் தன்னலமின்றி செயலாற்றி வரும் அனைத்து மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கும் ஞாயிறு மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைவரும் நன்றி தெரிவிப்போம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version