கே.ஜி.எஃப். இயக்குநருடன் இணையும் நடிகர் பிரபாஸ்!

பிரபாஸ் அடுத்ததாக கே.ஜி.எஃப் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘மஹாநடி’ படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

அடுத்ததாக ஓம் ராவத் இயக்க உள்ள அதிபுருஷ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

 

Exit mobile version