நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை என அவரது மனைவி புகார்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி, சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் மோசடி புகாரில் சிறை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில், நண்பரை பார்க்கச் சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பவில்லை என, அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசனின் சொத்துக்களை தங்களது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும், மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சொத்து பிரச்சனை தொடர்பாக, பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version