இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை போனில் மிரட்டிய நடிகர் கருணாகரன்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாகரன் கொலைமிரட்டல் விடுத்ததாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தொலைபேசி ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் தேதி வெளியான திரைப்படம் பொதுநலன் கருதி. இந்த படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக கருணாகரன் நடித்துள்ளார். இந்நிலையில், கருணாகரன் இந்த படத்தில் நடிப்பதற்காக 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகே, பின்னணி குரல் கொடுத்ததாகவும், ஆனால், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், கருணாகரன் வராதது குறித்து இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்ததோடு, இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் அலைபேசியில் அழைத்து, கருணாகரன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version