"தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"

தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

Exit mobile version