கொரோனா பற்றி வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு குறித்தும், தயார் நிலை குறித்தும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒருவரைத் தவிற வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version