பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற, தமிழக அரசு சார்பில், கூட்டுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தமிழக அரசு சார்பில் 2 , 363 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், உரிய பயனாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும், கையொப்பம் பெற்றப் பிறகே பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நியாய விலைக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பொங்கல்பரிசு வழங்கப்பட்டதும், பயனாளிகளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version