சின்னத்தம்பியை கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை

மைவாடி சாலை ரயில்நிலையம் அருகே நடமாடும் காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் மைவாடி பகுதியில் முகாமிட்டுள்ளன.அப்பகுதியில் உள்ள புதருக்குள் தஞ்சமடைந்துள்ள சின்னத்தம்பி நேற்று மாலை அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தது. சின்னத்தம்பியைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்தநிலையில் சின்னத் தம்பி புதருக்குள் இருந்து வெளியே வந்ததும் கும்கி யானைகள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்ட முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Exit mobile version