நடிகை சனம் ஷெட்டியிடம் சில்மிஷம் – கல்லூரி மாணவன் கைது

பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு  வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக மெசெஜ் அனுப்பிய விவகாரத்தில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். பிக்பாஸில் அவர் மீது ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அவர் வெளியில் வரும் போது அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. சமூக வலைத்தளங்களிலும் அவருக்காக அதிகம் ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டி சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தனக்கு ஆபாசமான மெசேஜ்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் அடையாறு சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.ஐபி முகவரியை வைத்து ஆபாச மெசஜ்களை அனுப்பியவர் திருச்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததை அடுத்து திருச்சி விரைந்த தனிப்படை போலீசார்.. ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்ததாகவும், பிக்பாஸ் 4 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற சனம் செட்டியின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை பழிவாங்க இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

 

Exit mobile version