முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை!

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் அருகே, போக்குவரத்து காவலர்களின் வாகன தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். வாகனங்களில் முகக் கவசம் அணியால் வருபவர்களுக்கு முகக் கவசங்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், கொரோனா, சமூகத் தொற்று உருவாகாமல் இருக்க, மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி சுகாதார அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முகக் கவசம் அணியாமல் நடந்து வருவோருக்கு 100 ரூபாயும், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கு 500 ரூபாயும் அபராதம் விதிப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version