தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 14ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகள் விடுவிக்கப்படாமல் இருப்பதால், மீனவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 36 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version