பொதுசுகாதார விதிகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுசுகாதார விதிமுறைகளை பின்பற்றாத எந்த கல்லூரியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், ஆதரவற்ற முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டை, துவக்கி வைத்த அவர், முதியோர்களை பாதுகாப்பது பராமரிப்பது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் மட்டும் 97 கல்லூரிகள், 167 விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version