ஆணாக நடித்து ஏமாற்றி நகையை பறித்த பெண்

ஆணாக நடித்து 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி, நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 10 ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமியிடம் விஷ்ணுபாலா என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பான இருவரும் சில மாதங்களாக பழகியுள்ள நிலையில், சிறுமியை காதலிப்பதாக விஷ்ணுபாலா கூறியுள்ளார். தொடர்ந்து அந்த நபரின் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமி, தனக்கு பணம் தேவைபடுவதாக விஷ்ணுபாலா கூறியதையடுத்து, வீட்டில் இருந்த 12 சவரன் நகையை அவரிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகும் 3 சவரன் தங்க வளையல்களையும் அந்த சிறுமி கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுபாலா பெண் என்பதும் ஆண் வேடமிட்டு சிறுமியை ஏமாற்றி 15 சவரன் நகைகளை ஏமாற்றியதும், தெரியவந்தது. இதனையடுத்து ஆணாக நடித்து ஏமாற்றிய கார்த்திகேயனி என்ற சரோஜாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version