சீர்காழியில் 175 அடி நீளமான தேசிய கொடி செய்து மாணவர்கள் சாதனை

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள்  73 வது ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், தேசப்பற்றை வெளிக்காட்டும் விதமாகவும் 175 அடி நீளமுள்ள தேசியக் கொடியை 73 மாணவர்கள் உருவாக்கினர்.

அதனை வைதீஸ்வரன் கோவில் கடைவீதியில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நீளமாக பிடித்து ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு தேசப்பற்றை மாணவர்கள் வெளிப்படுத்தினர். பள்ளி மாணவர்களின் இந்த சாதனை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Exit mobile version