பிறவியிலிருந்தே காது கேளாத, வாய் பேச முடியாத மாணவனின் சாதனை

கரூர் மாவட்டத்தில் பிறவியிலிருந்தே காது கேளாத, வாய் பேச முடியாத மாணவன், விண்ணை தொடும் அளவிற்கு பல சாதனைகள் புரிந்து வருகிறார்.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கார்த்திக். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத கார்த்திக், தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தடகளத்தில் மாநில அளவில் 3 தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கொரியாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் உலக அளவில் 8வது இடத்தை பிடித்த கார்த்திக், நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட உள்ளார். பாரா ஒலிம்பிக்கில் கார்த்திக், நிச்சயம் தங்கப்பதக்கத்தை வெல்வார் என தோட்டக்குறிச்சி கிராமத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்

Exit mobile version