தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

தாராபுரத்தை சேர்ந்த புனிதவதி என்பவர், கர்ப்பப்பை பிரச்சினை காரணமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 24 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து, வேறொரு மருத்துவமனைக்கு புனிதவதி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான், உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version