ஜெயலலிதாவின் கூற்றுப்படி 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும்-அமைச்சர் தங்கமணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்றுப்படி, 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும் என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, சீர்காழி தொகுதி உறுப்பினரின் வினாவுக்கு பதில் அளித்த அவர், சீர்காழி தொகுதி திட்டை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தொடர்ந்து அதே நிலையில், நீடித்து வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். திமுக உறுப்பினர் அன்பழகன் பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version