வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் அதிமுக

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளில் வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் முதலமைச்சராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திய, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால், பல்வேறு துறைகளில் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக திகழ்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1998ல் ஜெயலலிதா அமைத்தது போல், தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை மக்களவை தேர்தலுக்காக உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியை பாதுகாக்கவும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றி பெற ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version