திருச்சி அருகே மோட்டார் மூலம் முறைகேடாக குடிநீர் திருட்டு

திருச்சி அருகே, மோட்டார் மூலம் முறைகேடாக குடிநீரை திருடிய விவகாரத்தில், மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் பெரும்பாலான குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சில குடியிருப்புகளில் மின் மோட்டார் மூலம் திருட்டு தனமாக குடிநீரை உறிஞ்சுவதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில வீடுகளில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி திருடப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து, 8 மோட்டார்களை பறிமுதல் செய்ததுடன், அந்த வீடுகளுக்கான குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.

Exit mobile version