நாடாளுமன்ற தேர்தல் குறித்து தென்மாநில காவல்துறை டிஜிபிக்கள் கூட்டம்

திருப்பதியில் நடைபெற்ற தென்மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் மக்களவை தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் மாநில காவல்துறை டிஜிபிக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநில டிஜிபி ஆர். பி. தாகூர், தமிழக டிஜிபி ராஜேந்திரன், கர்நாடகா டிஜிபி நீலமணி ராஜு, தெலுங்கானா மாநில உள்துறை செயலாளர் ராஜு திருவேதி, ஒடிசா மாநில கூடுதல் டிஜிபி ஆர்.பி. கோச்சே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாக நடத்துவது, பணப் பட்டுவாடாவை தடுப்பது, சோதனைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version