புயல் பாதிப்பினால் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம் – மின்வாரியம்

கஜா புயல் பாதிப்பில் சிக்கிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளில் 21 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின் சீரமைப்பு பணிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரம் பணியாளர்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மின் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version