வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆதார் எண் பெற கட்டுப்பாடுகள் நீக்கம்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து 182 நாட்கள் முடிந்த பிறகுதான், ஆதார் எண் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அண்மையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் விண்ணப்பிக்க அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அத்துடன், ஆதார் எண் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், ‘‘உரிய இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்182 நாட்கள் காத்திருக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version