இளைஞர்களிடையே ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி, இந்தியா திரும்பிய விமானப்படை வீரர் அபிநத்தனின் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், வெற்றிகரமாக வீரநடை போட்டு இந்தியா திரும்பிய நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பெயர் ட்ரெண்டானது. பல்வேறு மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அபிநந்தனின் மீசை, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி என நகரங்கள் மட்டும் அல்லாது, கிராமங்களிலும் அபிநந்தன் மீசை போலவே இளைஞர்கள் மீசை வைத்துக்கொள்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Exit mobile version