அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் : முதல்வர் கோரிக்கை

இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனுக்கு, ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன், இக்கட்டான சூழ்நிலையிலும் முகத்தில் தைரியத்தை வெளிப்படுத்தியதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்திய அபிநந்தனை கவுரவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர், ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதை அபிநந்தனுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version