இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை; காவல்துறையினர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி அடுத்த கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவது மனைவி கருத்து வேறுபாடால் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கீழச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணை கடத்திய சுரேஷ், தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுரேஷை தேடி வருகின்றனர்.

Exit mobile version