ஆம் ஆத்மி அரசுக்கு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம்: அமைச்சர் அமித்ஷா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டபேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசு தினமான நேற்று, டெல்லி கொண்டா தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தியதில், சில மாநில அரசுகள், நீர் தூய்மையில் முதலிடத்திலும், மற்ற சில மாநில அரசுகள் சாலை கட்டுமானத்திலும், வேறு சில மாநில அரசுகள் மின்மயமாக்கலிலும் முன்னிலை வகிக்கும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதைத் தவிர, வேறு எதிலும் முதன்மை பெறவில்லை என்று கூறினார்.

Exit mobile version