நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை !

மதுரை அருகே நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பனங்காடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரிச்சூர் கிராமத்திற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, விளாத்தூர் அருகே இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் அரவிந்த்தை வழிமறித்து, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதனையடுத்து அவரது உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தப்பிச்சென்றனர். உயிரிழந்த அரவிந்தின் அண்ணன் வசந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் என்பதால், இதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version