ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், அதே ஊரில் மற்றொரு தெருவில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் இவருடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த ஓராண்டிற்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் பேசி எச்சரித்து அனுப்பப்பட்ட நிலையில், சிவகாசியில் உள்ள கல்லூரிக்கு செல்ல காத்திருந்த பெண்ணிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமார் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அருண்குமார் தீக்குளித்தார். 60 சதவிகித தீக்காயங்களுடன் சிவகாசி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version