காஞ்சிபுரத்தில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் எதிர் வீட்டு பெண்ணுக்கு, பட்டபகலில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் கூச்சலிட்டதால், அக்கம், பக்கத்தினர் அந்த இளைஞரை சுற்றி வளைத்தனர். பின்னர், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆறுமுகத்தை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் குறித்து அறிந்து வந்த, காவல் துறையினர் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Exit mobile version