மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்ணுடன் தூக்கிட்டு தற்கொலை – தகாத உறவு காரணமா?

சென்னை திருவிக நகரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்ணுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.சி. கார்டன் 4-வது தெருவில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கணேஷ் யூ மான்டல் என்ற இளைஞர் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மகனை மேற்கு வங்கத்தில் விட்டு விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு சென்ற அவர், மனைவியின் தங்கை லபானி மான்டலை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் லபானி மான்டலை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த கணேஷ் யூ மான்டல், தான் வசிக்கும் வீட்டின் அருகே மற்றோரு வீட்டை 7 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வாடகைக்கு எடுத்துள்ளார்.

நேற்று காலை அந்த வீட்டில் மின்விசிறி மாட்டுவதாக கூறிச் சென்ற கணேஷ் யூ மான்டல், லபானி மான்டலுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், மனைவி மேற்கு வங்கத்தில் உள்ள நிலையில், அவரது தங்கையை எதற்காக சென்னை அழைத்து வந்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version