தவறாக நடக்க முயன்ற இளைஞர்களை தாக்கிய இளம் பெண்

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்களை பெண் ஒருவர் பொது மக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தின் இடாக் பகுதியில் இளம் பெண் ஒருவரிடம் இளைஞர்கள் இருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து தமது உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த இளைஞர்களை உறவினர்கள் மடக்கி பிடித்தனர்.

இந்த நிலையில் அந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்களை சரமாரியாக தாக்கினார். ஆத்திரம் குறையாத அவர், எழ முயற்சித்த அந்த இளைஞரை உதைத்து தள்ளினார். அங்கிருந்தவர்கள் தடுத்த போதும் ஆத்திரம் தீராத அந்த பெண் தனது காலணியால் அடித்து உதைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Exit mobile version